சதமடித்த தக்காளி விலை- இனி தக்காளி சாதம் "கட்"

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மக்களின் அன்றாட உணவில் அத்யாவசியமான ஒன்று தக்காளி ஆகும். ஒவ்வொரு உணவிலும் தக்காளி இன்றியமையாததாக உள்ளது. இதில், கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் ஒரு நாளுக்கு தக்காளி தேவை 80 முதல் நூறு லாரிகள் வரை தக்காளி தேவைப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை சரிவர லாரிகளில் வந்த தக்காளி தற்போது வெறும் 30 முதல் 40 லாரிகளில் மட்டுமே வருகிறது. இதனால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துவிட்டது.

அதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி, பீகார், ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விளைச்சல் குறைவானதால் அந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவை நம்பி இருந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் தக்காளிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தக்காளி சந்தைக்கு புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் சந்தையுலும் தக்காளி வரத்து கடுமையாக குறைந்துவிட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

கோவையில், தற்போது தரமான தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயிக்கு விற்கப்படுவது சிறு, குறு நடுத்தர வர்க்கத்தினரை மேலும் இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. 

ஜிஎஸ்டி உயர்வு, பெட்ரோல் விலையில் அன்றாட மாற்றம், வறட்சி என்று அன்றாடம் பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு தற்போது காய், கறிகளின் விலை உயர்வும் பேரடியாக அமைந்துள்ளது.

இனிமேல் வெங்காயம் வெட்டினால் மட்டுமல்ல, தக்காளிக்கும் கண்ணீர் வடியும்...

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...